வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Sunday, May 30, 2010

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

பாரம்பரியமாக தென் தமிழகத்தின் வீர தீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு விளங்கிவருகிறது. பொங்கல் பண்டிகையின் போது இந்த வீர விளையாட்டு தென் தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, மற்றும் பல பகுதிகளில் நடைபெற்றுவருகின்றது.

போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், முதலில் இளம் கன்றுகளாக வாங்கி காலையில் கண்மாயில் காளைகளுக்கு நீச்சல் பழகிக்கொடுத்து, அதன் பின்னர் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தூசி, கருப்பட்டி, போன்ற உணவுப்பொருட்களை உணவாகக் கொடுக்கிறார்கள்.

மேலும் வயல் வெளிகளில் 2கயிறுகள் கட்டி காளைகளை அதன் இஷ்டத்திற்கு புல்லை மேயும்படி செய்யவைத்து மாலையில் வைக்கோலால் செய்து வைக்கப்பட்ட உருவ பொம்மையை இளைஞர்கள் விசில் அடித்தவுடன் காளைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து தனது கொம்புகளால் முட்டுவதுக்கும்,
மேலும் குப்பை மேட்டில் காளைகளை
நிறுத்தி கால்களால் தரையில் உரசி புழுதி பறக்கும்படி செய்யவும் பயிற்சி அளிக்கிறார்கள்.



தமிழக அரசு இந்த வருடம்
ஜல்லிக்க்கட்டை நல்ல பாதுகாப்புடனும் நடத்தி வீரர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்தவித தீங்கும் வராமல் மிகவும் சிறப்பாக நடத்தியது.

திரை அரங்கம்

தென் இந்தியாவின் முதல் திரையரங்கம்


சென்னை மாகாணத்தின் பல இடங்களில் டூரிங் தியேட்டர்களில் மவுனப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. சென்னை மவுண்ட்ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து இருந்த ரகுபதி வெங்கையா என்பவர், தானும் சினிமாவில் காலடி வைக்க விரும்பினார். முதல் கட்டமாக பியல் பிஷ்ஷர்ஸ் ராஜாஸ் கேஸ்கட் என்ற 500அடி நீளம் கொண்ட இரண்டு மவுன படங்களை அமெரிக்காவில் இருந்து வரவழைத்தார். கூடவே க்ரோனோ மெகாபோன் என்ற திரையிடும் ப்ரொஜக்டர் கருவியையும் வரவழைத்தார். சென்னை ரிப்பன் கட்டிடம் அருகில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் அந்த படங்களை திரையிட்டார். கூட்டம் அலைமோதியது. நல்ல வருமானம் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு ஒரு டூரிங் சினிமாவை தொடங்கினார். டூரிங் என்றால் ஊர் ஊராக சென்று சினிமாவை திரையிடுவது. இவரும் குண்டூர் தொடங்கி கட்டாக் வரை பல நகரங்களில் அந்த படங்களை திரையிட்டு லாபம் பார்த்தார்.
கிடைத்த லாபத்தை வைத்து சென்னையில் மவுனப்படத்தை திரையிடும் ஒரு நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தென் இந்தியாவில் இந்தியர் ஒருவர் கட்டிய முதல் தியேட்டர் இது தான். 1913ல் கட்டப்பட்ட அந்த தியேட்டருக்கு கெயிட்டி என்று பெயரிட்டார். 2005வரை அந்த தியேட்டர் இயங்கிவந்தது.

இவரே 1914ல்தங்கச்சாலை சந்திப்பில் கிரவுன் என்ற தியேட்டர், 1915ல்புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் க்ளோப் என்ற தியேட்டரையும் கட்டினார். பின்னர் க்ளோப் தியேட்டர் ராக்சி என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று தியேட்டர்களுமே மவுன படங்களை திரையிட்டு வந்தன.
அமெரிக்காவில் பிரபலமான யுனிவர்சல் நிறுவனம் தயாரித்த க்ளட்சிங் ஹேன்ட் கிரேட் ரிவார்டு, கீஸ் ஸ்டோன்காப்ஸ் போன்ற மவுன படங்களை வரவழைத்து தனது மூன்று தியேட்டர்களிலும் திரையிட்டார். ஹாலிவூட் சினிமாக்களை தெனிந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் வெங்கையாதான். இதன் மூலம் தெனிந்திய சினிமாவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

இந்த காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் ஹரிச்சந்திரா, கீசகவதம் போன்ற மவுனப்படங்கள் வெளிவந்தன. வெங்கையா இந்த இரண்டு படங்களையும் தனது மூன்று தியேட்டர்களிலும் மாறி மாறி திரையிட்டார். இவற்றின் வெற்றி இவரை படத்தயாரிப்பில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தனது மகன் ரகுபதி பிரகாசாவை லண்டனுக்கு திரைப்படதுறையில் பயிற்சிபெற அனுப்பினார்.

இந்தியர் ஒருவர் தெனிந்தியாவில் கட்டிய இந்த மூன்று தியேட்டர்களிலுமே 1932ல் பேசும் படங்களை திரையிடும் நவீன கருவிகளை பொருத்தினார். இதன்பின்னர் இங்கு பல பேசும் படங்கள் திரையிடப்பட்டன.

உடலுக்குள் விஞ்ஞானம்

உடலுக்குள் விஞ்ஞானம்
துணிநேய்யக்கூடிய மில்லில் ஒரு வேடிக்கையைப் பார்க்கலாம். கண்டைஎன்று சொல்வார்கள். கண்டை என்றால் நாடா இல்லை. நாடாவுக்குள்ளாக நூல் சுற்றி வருவதைக் கண்டை என்று சொல்வார்கள். கண்டையை கைத்தறியில் தார் என்று சொல்வார்கள். நாடாவுக்குள்ளக நூல் சுற்றி ஓடிக்கொண்டே இருக்கும். எங்கேயாவது நூல் காலியானால் அந்த கண்டையை தூக்கி எரிந்து விடும். அப்படி தூக்கி எரிந்தவுடனே, இன்னொரு இயந்திரத்தில் ஓடிக்கொண்டே இருக்கிற கண்டையில் ஒன்றை எடுத்து காலியான அந்த இடத்தில் மாட்டிக்கொள்ளும்.
கண்டையைப் போன்ற விஞ்ஞானம் நம் உடலிலும் நடைபெறுகிறது. உடலில்

ஒவ்வொரு செல்லும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கிறது. சீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செல்லையும் அப்படியே இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது. எங்கேயாகிலும் வேகம் அதிகமானாலும் குறைந்தாலும் செல்கள் உடைந்து விடும். உடனே உடலில் உள்ள இரத்த அணுக்கள் சேர்ந்து எந்தெந்த இடத்தில பற்றாகுறை உள்ளதோ அதது அந்தந்த இடத்தில புதுப்பிக்கப்படும்.

காந்த ஆற்றலினால் செல்களுக்குத் தேவையானதை தள்ளி வெளியே கொண்டு செல்கிறது. இவ்வாறாக செல்லில் ஒரு பெரிய நிறுவனத்தைப் போன்ற நிர்வாகம் நடைபெறுகிறது. தானாகவே நடைபெறும் இந்த இயக்கத்திற்கு கபாட இயக்கம் என்று பெயர்.

கபாடம் என்றால் இடம் விடாமல் கொவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். கண்டயைப் போன்ற இயக்கமே கபாட இயக்கம் ஆகும்.

மருத்துவமும் மகத்துவமும்

வாழை பழத்தின் மகிமை

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. மேலும் பல நோய்களை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தை இணைத்துக் கொடுத்தனர்.

மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது. வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும். புகை பழக்கத்தை விடமுடியாமல் தவிபவர்கள் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.


ஆண்மைக்கு ஜாதிக்காய்
ஜாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடலை வலிமையாக்கும், வாயு கோளாறு காராணமாக வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரண மந்தம், வாந்தி, பேதி, ஒற்றை தலைவலி, மூச்சிறைப்பு, இருமல், ஆகிய பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் உடையது ஜாதிக்காய். குறிப்பாக ஆண்களுக்கு விந்துக் குறைவை போக்கிறது. ஜாதிக்காய் எண்ணை
பல்வலி, வாத நோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது.

Saturday, May 29, 2010

சுற்றுலா

எங்கள் நிறுவனத்தில் சென்ற மாதம் மூணாருக்கு சுற்றுலா சென்று கொஞ்சம் களைப்பாறி வந்தோம். நான் ரசித்த சில இடங்களை உங்களுடன் இதன் மூலம் பரிமாறிக்கொள்கிறேன்.

















































கடன் அட்டை

கடன் அட்டை .......ஒரு தூண்டில்!
இன்றைய ஆடம்பர உலகில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகிவிட்டது. ஒன்றிற்கு மேல்பட்ட கடன் அட்டையை வைத்து இருப்பது ஒரு பகட்டகிவிட்டது.

ஒரு பொருளை சொந்தகமாக வாங்குபவரை விட கடன் அட்டை மூலமாக வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது சர்வசாதரனமாகிவிட்டது.
அது மட்டுமல்லாமல் இன்று தனியார் வங்கிகள் பல சலுகைகள் தந்து எந்தவித சான்று பத்திரமோ, விளக்க சான்றிதல்களோ இல்லாமலேயே கடன் அட்டைகளை தந்துவிடுகின்றன.

இதே போல் ஒரு நபர் முன்று அல்லது அதற்க்கு மேற்பட்டோ கடன் அட்டையை பெறுவது சுலபமாகிவிட்டது.
ஆனால் இதில் எத்தனை பேருக்கு அட்டையின் வட்டி விகிதம், இதர சேவை கட்டண விவரம், கடன் அட்டையை முறையாக பயன்படுத்தும் விவரம் தெரியும் என்று கேட்டால் தெரியாது என்பதே பதிலாக இருக்கும்.
  1. கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?
  2. தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?
  3. கடன் அட்டைகளை எவ்வாறு பராமரிப்பது?

கடன் அட்டையை தேர்வு செய்யும் போது வங்கியின் இதர ஒப்பந்தகளை ஆராய்ந்து கடன் அட்டையின் வருட கட்டணம் சேவை கட்டணம் ஆகியவற்றையும் தெளிவாக தெரிந்துக்கொண்டு விண்ணப்பியுங்கள்.

ஏஜென்ட்டுகளின் பேச்சை நம்பாமல் எழுத்து மூலமாக ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருக்கவும். உங்களின் மாத பில்லினை கவனமாக பார்க்கவும். நீங்கள் பயன்படுத்தாத அல்லது இலவச சேவை காலத்தில் சேவை கட்டணம் ஆகியவை வசூலித்து இருந்தால் உடனே வங்கிக்கு தெரியப்படுத்தி அதை உங்கள் கணக்கில் சரி செய்யவும். உங்களுடைய கடன் அட்டையின் மொத்த கடன் அளவை சரியாக தெரிந்து வைத்து இருக்கவும்.

முடிந்த வரைக்கும் பொருள்கள் வாங்கிய தேதியில் இருந்து 30நாள்களுக்குள் உங்களால் பணத்தை திருப்பி செலுத்த முடியும் என்றால் மட்டும் கடன் அட்டையை பயன்படுத்தவும். 30நாள்களுக்கு பிறகு உங்களால் செலுத்த முடியவில்லை என்றல் உங்கள் கணக்கில் வட்டி சேர ஆரம்பித்துவிடும். நன்றாக கவனமுடன் கையாளுங்கள்.

தினசரி வாழ்கையில் கடன் அட்டையை எவ்வாறு பயன்படுத்துவது?

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பதை புரிந்துக்கொண்டு அத்தியாய தேவைகளுக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்த வேண்டும். வெறும் ஆடம்பரத்திற்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிக்கொல்லாமல் முடிந்த வரை கையிருப்பை செலவழித்து மிகவும் அவசரமான காலத்திற்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்தவும். எப்போது கடன் அட்டையின் மூலம் செலவழித்தல் அந்த மாத பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வரை பொருள்களின் ரசீதை கையில் வைத்து இருக்கவும். தேவையற்ற இடங்களில் கடன் அட்டையின் விபரங்களை பயன்படுத்துவதை தவிக்கவும். நண்பர்கள், மின்னாஞ்சல்கள் ஆகியவற்றில் அட்டையின் விபரங்களை பயன்படுத்தாமல் இருக்கவும். எப்போதும் உங்கள் கடன் தொகை உங்களின் மொத்த கடன் அளவிற்குள் இருக்குமாறு கடை பிடிப்பது அவசியம். கடன் அட்டையின் முறைகேடான பயன்பாட்டிற்கும் அட்டையின் உரிமையாளரே பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.

மாத தவணையை கட்ட முடியவில்லை என்றாலும் கூட சம்பந்த பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லையிலேயே இருக்கவும். உங்கள் மாத தவணையை வட்டியுடன் கட்ட உரிமை உள்ளத்தால் தவணையை தவறாமல் கட்ட வழியை பாருங்கள்.

வங்கிகளுக்கான போது தகவல் களஞ்சியம் சிவில் தளத்தில் உங்களை பற்றிய தகல்களை மற்ற வங்கிகள் பெறமுடியும் என்பதால் உங்களின் நேர்மையை கடைப்பிடிக்கவும்.

பல கடன் அட்டைகளை பயன்படுத்தி விட்டு வெளியில் வர முடியாமல் தவிப்பவர்கள் வட்டியில்லா பண மாற்று முறையை கடை பிடித்து சீக்கிரம் கடனை அடைக்க வழியை பாருங்கள்.

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கலங்கி நிற்க்காமல் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து தேவையான உதவிகளை பெற்று முடிந்த வரை கடனை அடைத்துவிட்டு தக்க சமயத்தில் உதவியர்களுக்கு திரும்ப கொடுத்து நல்ல பெயர், நல்ல உறவை இழக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசரகால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும். இப்படி சந்தோசம் என்பது வெறும் ஆடம்பரத்தில் இல்லை உணர்ந்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.

கடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே.

இப்பொழுதெல்லாம் வங்கிகள் வருமானத்திற்காக கடன் அட்டை எனும் தூண்டிலை இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே பயான்படுத்திக்கொண்டு வருகின்றன என்பது வருத்தத்தை அளிக்கிறது.

எனக்கு தெரிந்தது மற்றும் நான் படித்தவைகளில் இருந்து.




உங்கள் சிந்தனைக்கு

உங்கள் சிந்தனைக்கு

மிகமிக நல்ல நாள் - இன்று

மிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு

மிகவும் வேண்டாதது - வெகுமதி

மிகவும் பெரிய தேவை - சமயோஜித புத்தி

மிகவும் கொடிய நோய் - பேராசை

மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

கிழ்த்தரமான விஷயம் - பொறாமை

நம்பக் கூடாதது - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

செய்யக் கூடாதது - உபதேசம்

செய்ய வேண்டியது - உதவி

விலக்க வேண்டியது - விவாதம்

உயர்வுக்கு வழி - உழைப்பு

நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு

சித்தன்னவாசல் ஓவியம்

சித்தன்னவாசல் மலையில் காலத்தால் அழிவில்லாத வண்ண ஓவியங்கள் எத்தனையோ நூர்றண்டுகளாக கலை நெஞ்சங்களின் கற்பனைக்கும் எழுச்சிக்கும் ஊற்றாக இருக்கிறது. ஆதர்சனமான அந்த கலைச்செல்வங்களுக்கு இப்போது துர்பாக்கிய நிலை. மகேந்திர பல்லவனின் ஆவி இதை கண்டிருக்குமா. இவற்றை உருவாக்கிய மகா கலைஞன் நினைத்து பார்திருப்பனா.
மூலிகையை அறைத்தோ வண்ணக்கற்களை போடியக்கியோ அழியாத வண்ணத்தை தயாரித்து ஓவியங்களை தீட்டிவிட்டோம். அவற்றுக்கு அழிவில்லை என்று மகிழ்ந்து போயிருப்பானோ அந்த மகா கலைஞன்.
வண்ணம் அழியாத அந்த ஓவியங்களை கடைசியில் சுரண்டி எடுத்திருக்கிறார்கள். நம்மவர்களின் அறியாத செய்கையினால் இன்று அந்த ஓவியங்கள் உருவத்தை இழந்து நிற்கின்றன. அவற்றின் ஆன்மா மட்டும் அழிவில்லாமல் தன்னை படைத்த கலைஞனின் கைவண்ணத்துக்கு காலத்தை வென்ற சாட்சியாக இருக்கிறது.
நம்மவர்களின் அறியாமையால் காலத்தால் அழியாத போக்கீஷங்கள் சிதலமடைந்து வருவது மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ காளஹஸ்தி கோயில்

ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் கோபுரத்தில் விரிசல்


பிரசித்தி பெற்ற ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் ராஜகோபுரம் இரண்டாக பிளந்துவிட்டது . இக்கோவில் 1516ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் மன்னரால் கட்டப்பட்டது. பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோயிலில் நடைபெறும் ராகு பூஜை சிறப்பு வாய்ந்ததாகும். ராஜகோபுரம் 1988ஆம் ஆண்டு சீர் செய்யப்பட்டது. இதில் விரிசல் அதிகம் அடைந்து கடந்த சில நாள்களில் இரண்டாக பிளந்தது. இதனால் பக்தர்களும் பொதுமக்களும் வேதனை அடைந்து ராஜகோபுரத்தை சீரமைக்கும்படி கோயில் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மூணாறில் நடந்த பயங்கரம்

மூணாறில் நடந்த பயங்கரம்



எங்கள் நிறுவத்தில் 1மே ந் தேதி மூணாருக்கு சுற்றுலா சென்று இருந்தோம். போட் ஹவுஸ்ல் நாங்கள் படகு சவாரி செல்லும் போது இந்த யானை உடல்நிலை சரி இல்லாமல் சில நாள்களாக ஒரே இடத்தில நின்றுகொண்டு இருந்தது. இரண்டு நாள்களுக்கு பிறகு இந்த யானையை சில விஷமிகள் கற்களால் அடித்து துன்புறுத்த யானை அக்கறையில் இருந்து குறுக்கே வந்து சுற்றுலா சென்ற 30வாகனங்களை துவம்சம் விட்டது.


அந்தோ பரிதாபம், இந்த யானை அடுத்த நாள் காட்டிற்குள் சென்று இறந்துவிட்டது.

அம்மன்குடி ராமநவமி உற்சவம்

அம்மன்குடி ராமநவமி உற்சவம்

கும்பகோணத்தின் அருகில் அம்மன்குடி என்ற பழமைவாய்ந்த ஊர் உள்ளது. இவ்வூரில் புகழ்பெற்ற அம்மன் கோயில் உள்ளது. இவ்வூர் அம்மன் குடிகொண்ட ஊர் ஆகும். இவ்வூரில் மிகவும் பழமைவாய்ந்த லக்ஷ்மிநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ப்ரதிவருஷம் பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவம் சீதாகல்யாணத்துடன் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த பொருள் உதவிகளை செய்துதருமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

புன்னைநல்லூர் மாரியம்மன்





புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சாவூர் அருகில் புகழ்பெற்ற மாரியம்மன்கோயில் புன்னை நல்லூர் என்ற ஊரில் தாஞ்சவூரில் இருந்து 7 கி. மீ தூரத்தில் உள்ளது. தஞ்சையில் இருந்து கோவிலுக்கு சென்று வர பேருந்துகள் அதிகம் உள்ளது. இக்கோயிலில் பிரதி வருஷம் சித்திரை மாதம் பிராமணர்கள் எடுக்கும் பால் குடம் தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து புறப்பட்டு நடந்தே செல்லும்

Tuesday, May 25, 2010



ஒளியே இறைவன்